Tuesday 8 October 2013

குழந்தையின் படகு...



பிஞ்சு கைகளிலே காகிதம் படகாய்
மாறி கடலாகி போன மழை நீரில்
மிதக்க தயாராய் 

விட்ட படகு மெல்லிய காற்றின் 
திசையில் செல்ல தன் கண்டுபிடிப்பின் 
வெற்றியை குழந்தை ரசிக்க 

வந்தது எங்கிருந்தோ மழை 

விழியோரம் கண்ணீர் நெஞ்சிலோ 
சொல்லமுடியாத வலி தன் முன்னே
தன் படகு தண்ணீரில் முங்குவதை
காண சகிக்க முடியாத குழந்தைக்கு 

ஆனால் காகித படகோ வாழ்க்கை 
தத்துவத்தை மிக எளிதாக புரிய வைத்தது 
அருகில் நின்று அதை பார்த்து 

கொண்டிருந்த வாலிபனுக்கு.. 

2 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
    http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete